எச்சரிக்கை

" கொல கொலயா முந்திரிக்கா பவர் ஸ்டார் ர தொட்டா நீ கத்திரிக்கா "

புதன், 3 ஏப்ரல், 2013

பவர் ஸ்டாருனா சும்மா அதிரனும்ல...





பவர்ஸ்டார் ஒரு முறை மு‌ம்பை‌யி‌ல் உ‌ள்ள அலுவலக‌ம் ஒ‌ன்‌றி‌ல் அலுவலக பணியாளராக (‌பியூ‌ன்) ப‌ணியா‌ற்‌றி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ர்.அவ‌ரிட‌ம் ஒரு கெ‌ட்ட பழ‌க்க‌ம் இரு‌ந்தது. அதாவது யாராவது, ஒருவரை‌ப் ப‌ற்‌றி பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ல், நடு‌‌வி‌ல் புகு‌ந்து, ஓ... அவரா? அவரை என‌க்கு தெ‌ரியுமே எ‌ன்று கூறுவா‌ர்.

ஒரு முறை அ‌ந்த அலுவலக‌த்‌தி‌ன் மேல‌திகா‌ரி (அமெ‌ரி‌க்கா‌வில் ‌பிற‌ந்து வள‌ர்‌ந்தவ‌ர்) ஆ‌‌ர்னா‌ல்‌ட் ப‌ற்‌றி பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ர். உடனே எ‌ப்போது‌ம் போல நமது பவர்ஸ்டார், ஓ ஆ‌ர்னா‌ல்‌டா அவ‌ர் எ‌ன்னோட ந‌ண்பரா‌ச்சே எ‌ன்று கூ‌றினா‌ர்.இதை‌க் கே‌ட்ட முதலா‌ளி‌க்கு‌‌ சி‌ரி‌ப்பு வ‌ந்து‌வி‌ட்டது. எ‌ன்ன ஆ‌‌ர்னா‌ல்டை உன‌க்கு‌த் தெ‌ரியுமா? ச‌ரி அடு‌த்த முறை நா‌ன் அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு‌ப் போகு‌ம்போது உ‌ன்னையு‌ம் அழை‌த்து‌ச் செ‌ல்‌கிறேன். உன‌க்கு ஆ‌ர்னா‌ல்டை தெ‌ரியுமா இ‌ல்லையா எ‌ன்பைத அ‌ப்போது பா‌ர்‌க்‌கிறே‌ன் எ‌ன்று கூ‌றினா‌ர்.அத‌ற்கு பவர்ஸ்டாரும் ஒ‌‌ப்பு‌க் கொ‌ண்டு தலையசை‌த்தா‌ர்.

முதலா‌ளி சொ‌ன்னபடியே பவர்ஸ்டாரை அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு அழை‌த்து‌ப் போனா‌‌ர். ‌பிறகு ஆ‌ர்னா‌ல்டி‌ன் ‌வீ‌ட்டி‌ற்கு‌ அழை‌த்து‌ச் செ‌ன்றா‌ர். ஆ‌ர்னா‌ல்‌ட் பவர்ஸ்டாரை பா‌ர்‌த்தது‌ம் ஓடி வ‌ந்து "ஹா‌ய் பவர்... எ‌வ்வளவு நாளா‌ச்சுடா உ‌ன்ன பா‌ர்‌த்து... எ‌ங்கடா போன இ‌வ்வளவு நாளா" எ‌ன்று கே‌ட்டவாறு அவரை உ‌ள்ளே அழை‌த்து‌ச் செ‌ன்று தே‌னீ‌ர் ‌விரு‌ந்து அ‌ளி‌த்தா‌ர்.அதுவரை வாச‌லி‌ல் ‌நி‌ன்‌றிரு‌ந்தா‌ர் அ‌தி‌ர்‌ச்‌சியடை‌ந்த முதலா‌ளி. ‌பி‌ன்ன‌ர் பவர்ஸ்டார் வ‌ந்தது‌ம், ‌

ஒபாமா ‌வீ‌ட்டி‌ற்கு அழை‌த்து‌ச் செ‌‌ன்றா‌ர். ‌ஒபாமாவும் ஆ‌ர்னா‌ல்டை‌ப் போலவே பவர்ஸ்டாரை க‌ட்டி அணை‌த்து‌க் கொ‌ண்டு, "ஒரு கா‌பியாவது குடி‌‌த்து‌வி‌ட்டு‌ப் போ" என வ‌ற்புறு‌த்‌தினா‌ர்.இதை‌ப் பா‌ர்‌த்து அ‌தி‌ர்‌ச்‌சி‌யி‌ல் உறை‌ந்தே போனா‌‌ர் முதலா‌ளி.

கடை‌சியாக வாடிகனு‌க்கு பவர்ஸ்டாரை அழை‌த்து‌ப் போனா‌‌ர் முதலா‌ளி. அ‌ங்கு ம‌க்க‌ள் கூ‌ட்ட‌ம் அலை மோ‌தியது. அ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ளே நுழைவது ‌மிக‌க் கடினமான ‌விஷயமாக இரு‌ந்தது. எனவே பவர்ஸ்டார்
தனது முதலா‌ளி‌யிட‌ம் "கொ‌ஞ்‌ச‌ம் இ‌ங்கேயே இரு‌ங்க‌ள். நா‌ன் போ‌ய் வரு‌கிறே‌ன்" எ‌ன்று கூ‌றி‌வி‌ட்டு‌ச் செ‌ன்றா‌‌ர்.‌
சி‌றிது நேர‌த்‌தி‌ல் வாடிக‌ன் மா‌ளிகை‌யி‌ன் பா‌ல்க‌னி‌யி‌ல் இரு‌ந்து போ‌ப்‌பி‌ன் கைகளை ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டு பவர்ஸ்டார் தோ‌ன்‌றினா‌ன்.‌அ‌வ்வளவுதா‌ன் வாச‌லி‌ல் ‌நி‌ன்று இதனை‌ப் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த முதலா‌ளி மய‌ங்‌கி ‌விழு‌ந்தா‌ர். அவரை உடனடியாக மரு‌‌த்துவமனை‌க்கு‌க் கொ‌ண்டு செ‌ன்று ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌த்த ‌பி‌ன் பவர்ஸ்டார், எ‌ன்ன ஆ‌னது உ‌ங்களு‌க்கு? எ‌ன்று கே‌ட்டா‌ர்.

அத‌ற்கு முதலா‌ளி, "ஆ‌ர்னா‌ல்டை உன‌க்கு‌த் தெ‌ரியு‌ம், ‌ஒபாமாவுக்கு‌ம் உ‌ன்னை‌த் தெ‌ரியு‌ம், போ‌ப்புட‌னு‌ம் உன‌க்கு பழ‌க்க‌ம் இரு‌க்‌கிறது. இதெ‌ல்லா‌ம் பெ‌ரிய ‌விஷயமே இ‌ல்லை. ஆனா‌ல்........
‌நீ போ‌ப்புட‌ன் பா‌ல்க‌னி‌யி‌ல் தோ‌ன்‌றியது‌ம் அ‌ங்கு கூடி‌யிரு‌ந்த கூ‌ட்ட‌‌த்‌தி‌ல் இரு‌ந்த ஒருவ‌ன், எ‌ன்‌னிட‌ம்... யாருடா அது பா‌ல்க‌னி‌யி‌ல் பவர்ஸ்டார் கையை‌ப் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பது ‌எ‌ன்று கே‌ட்டா‌ன். அதை‌த் தா‌ன் எ‌ன்னா‌ல் தா‌ங்‌கி‌க் கொ‌ள்ள முடிய‌வி‌ல்லை" எ‌ன்று கூ‌றி ‌‌வி‌ட்டு ‌மீ‌ண்டு‌ம் மய‌க்கமானா‌ர்.

#பவர் ஸ்டாருனா சும்மா அதிரனும்ல...

வெள்ளி, 8 மார்ச், 2013

அழகன் அழகி ஷூட்டிங் ஸ்பாட் - பவர் ஸ்டார் ரின் கலக்கல் ஸ்டில்ஸ்

அழகன்  அழகி  ஷூட்டிங் ஸ்பாட்  - பவர் ஸ்டார் ரின்  கலக்கல் ஸ்டில்ஸ்







ஒன்பதுல குரு படபிடிப்பு பவர் ஸ்டார்ரின் பவர் புல் ஆக்டிங்







“கூகுள், யஹூ ஓனர்கள் பவர் ஸ்டார் சீனிவாசன் ரசிகர்களா?”







தமிழ் சினிமா இணையதளங்களிலும், சமூக இணையதளங்களிலும் அதிகம் அடிபடும் பெயர் பவர் ஸ்டார் சீனிவாசனின் பெயர் என்ற நிலை மாறி, அகில இந்திய அளவிலும் செல்வாக்கு ஏற்பட்டிருக்கிறது நம்மாளுக்கு.
அதனால், கொந்தளிக்கிறார்கள் ஆந்திரா ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில், சூப்புர் ஸ்டார் என்றால் ஒரேயொரு ரஜினி, இளைய தளபதி என்றால் ஒரேயொரு விஜய் என்று அவரவர் பட்டப் பெயர்களில் அறியப்பட்டு இருப்பதுபோல, ஆந்திராவில் பவன் கல்யானோட பட்டப் பெயர் பவர் ஸ்டார்! அவரது பட போஸ்டர்கள் எல்லாவற்றிலும், பவர் ஸ்டார் பவன் கல்யான் என்றே போடப்படுகிறது.
இப்போதெல்லாம் கூகுள், யாஹு போன்ற சர்ச் இஞ்சின் இணைய தளங்களுக்கு போய் ‘பவர் ஸ்டார்’ என்று தெலுங்கு சினிமா ரசிகர்கள் டைப் செய்தால், எடுப்பான பற்களுடன் சிரித்தபடி ஒரு மூஞ்சிதான் வந்து நிற்குதாம்!
“யாருங்க இது பல்லை காட்டிட்டு நிற்கிறது?  கல்யாணராமன் கமல் போல நம்ம பவன் கல்யானின் புது படத்துக்கு, புது கெட்டப்போ” என்று தெலுங்கு ரசிகர்கள் தலையைப் பிய்த்துக்கொண்டு மேலதிக விபரங்களை தேடியதில், தமிழில் ஒரு பவர் ஸ்டார் உலா வரும் விஷயம் அவர்களுக்கு தெரிந்தது.
அதுவும் சாதாரண உலா அல்ல… இணைய உலா! அதில்தான் தொடங்கியது ஆந்திராக்காரர்களுக்கு சிக்கல்.
பவன் கல்யான் ரசிகர்கள் அதுபற்றி புகார் கொடுத்ததை அடுத்து, அவரது ரசிகர்மன்ற தலைமையகத்தில் கூடி, ஒரு டெஸ்ட் செய்து பார்த்தார்களாம்.
சர்ச் இஞ்சின் இணைய தளங்களுக்கு போய் ‘பவர் ஸ்டார்’ என்று டைப் செய்தால், முதல் 4 பக்கங்களுக்கு நம்ம பவர் ஸ்டாரின் விதவித போஸ்கள் வந்து 5-வது பக்கத்துக்கு பிறகுதான், போனால் போகிறதென்று பவன் கல்யான் பற்றி வருகிறதாம்!
இதனால், கடந்த சில தினங்களுக்கு முன் நம்ம ‘பவர் சீனியோட’ கொடும்பாவியை எரிச்சு எதிர்ப்பு தெரிவிச்சுருக்காங்க பவன் கல்யானோட ரசிகர்கள்.
அது மட்டுமல்ல, “நம்ம ரியல் ஹரோவும், அவங்க (ஹி..ஹி.. தமிழர்கள்) காமெடியனும் ஒண்ணா? இனிமேல் அப்படி வராதது மாதிரி உங்க சர்ச் இன்ஜினை மாற்றி அமைச்சுக் கொடுங்க” என்று இவ்விரு இணைய தளங்களுக்கும் வேண்டுகோள் விடுத்து லட்சக்கணக்கான ரசிகர்கள் இமெயில் அனுப்பியிருக்கிறார்களாம்.
ஆனால், இணையதளத்தில் அதிக எண்ணிக்கையானவர்கள் எந்த பவர் ஸ்டாரை கிளிக் செய்கிறார்களோ, அந்த பவர் ஸ்டாரின் பெயர் முதலில் வருவதாக புரோகிராம் செய்யப்பட்டுள்ளன, கூகுள், மற்றும் யாஹூ சர்ச் இஞ்சின்கள். அந்த விதத்தில் அதிகம் கிளிக் செய்யப்படுவது, நம்ம சீனியோட போட்டோக்கள்தான்!
தன் கொடும்பாவி எரிக்கப்பட்டதை கேள்விப்பட்ட நம்ம ஊரு பவர், “ஆஹா அற்புதம்… எட்றா ஒரு டிக்கெட்டு ஆந்திராவுக்கு. அங்கேயும் கலக்கணும்” என்று சொல்லி வருகிறாராம்.
இரு மாநிலங்களுக்கும் இடையே நிலைமை இன்னமும் கன்ட்ரோலில்தான் இருக்கிறது. எப்போது அவுட்-ஆஃப்-கன்ட்ரோல் ஆகும் என்றால், ‘லத்திகா’ படத்தை தெலுங்கில் டப் செய்து, ஆந்திராவில் ரிலீஸ் செய்யும்போதுதான்!
அப்போது ஓடும் ரத்த ஆறு!

ஆந்திராவில் பவர்ஸ்டார் சீனிவாசன் கொடும்பாவியை எரிச்சாங்களா?

பவர்ஸ்டார் என்று டாக்டர் சீனிவாசன் பட்டப் பெயர் வைத்தாலும் வைத்தார் அது கொடும்பாவி எரிப்பு வரை வந்திருக்கிறது. தங்களது தலைவருக்குக் கடும் போட்டியாக சீனி கிளம்பியிருப்பதைக் கண்டு கொதிப்படைந்த ஆந்திர பவர்ஸ்டார் பவன் கல்யாண் ரசிகர்கள் நம்ம ஊர் பவர் ஸ்டாரின் கொடும்பாவியைக் கொளுத்தி விளையாடியுள்ளனராம். 
கூகுள், யாஹூ என தேடுபொறியில் பவர்ஸ்டார் என்று போட்டாலே அங்கு நம்ம சீனிவாசன் வருவதுதான் அவர்களின் வயிற்றெரிச்சலுக்கு காரணம். ஆந்திராவில் பவன் கல்யாண் பட்டப் பெயர் பவர் ஸ்டார்! அவரது பட போஸ்டர்கள் எல்லாவற்றிலும், பவர் ஸ்டார் பவன் கல்யான் என்றே போடப்படுகிறது. ஆனால், கூகுள், யாஹூ போய் ஆசை ஆசையாய் தெலுங்கு ரசிகர்கள் பவர் ஸ்டார் என்று டைப் செய்தால் எடுப்பான பற்களுடன் சிரித்தபடி ஒரு மூஞ்சிதான் வந்து நிற்குதாம்! கல்யாணராமன் கமல் போல நம்ம பவன் கல்யானின் புது படத்துக்கு, புது கெட்டப்போ என்று தெலுங்கு ரசிகர்கள் தலையைப் பிய்த்துக்கொண்டு விபரங்களை தேடியதில், தமிழில் ஒரு பவர் ஸ்டார் உலா வரும் விஷயம் அவர்களுக்கு தெரிந்தது. அப்புறம்தான் ஆவேசப்பட்டுள்ளனர் தெலுங்கு ரசிகர்கள்.
பவன் கல்யாண் தலைமை ரசிகர் மன்றத்தில் ஒன்று கூடிய ரசிகர்கள் சர்ச் இஞ்சின் இணைய தளங்களுக்கு போய் மீண்டும் சோதனை செய்து பார்த்துள்ளனர். ‘பவர் ஸ்டார்' என்று டைப் செய்தால், முதல் 4 பக்கங்களுக்கு தமிழ் பவர் ஸ்டாரின் விதவித போஸ்கள் வந்து 5-வது பக்கத்துக்கு பிறகுதான், போனால் போகிறதென்று பவன் கல்யாண் பற்றி வருகிறதாம்!
இதனால், கடந்த சில தினங்களுக்கு பவர் ஸ்டார் சீனிவாசனின் கொடும்பாவியை எரிச்சு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் பவன் கல்யாண் ரசிகர்கள்.
ஹீரோவும், காமெடியனும் எப்படி ஒண்ணாக முடியும்? இனிமேல் அப்படி வராதது மாதிரி சர்ச் இன்ஜினை மாற்றி அமைச்சுக் கொடுங்க என்று இவ்விரு இணைய தளங்களுக்கும் வேண்டுகோள் விடுத்து பவன் கல்யாணின் லட்சக்கணக்கான ரசிகர்கள் இமெயில் அனுப்பியிருக்கிறார்களாம்.
இணையதளத்தில் அதிக எண்ணிக்கையானவர்கள் எந்த பவர் ஸ்டாரை கிளிக் செய்கிறார்களோ, அந்த பவர் ஸ்டாரின் பெயர் முதலில் வருவதாக புரோகிராம் செய்யப்பட்டுள்ளன, கூகுள், மற்றும் யாஹூ சர்ச் இஞ்சின்கள். அந்த வகையில் அதிகம் கிளிக் செய்யப்படுவது, பவர் சீனிவாசனின் போட்டோக்கள்தானாம்.
  பவர் ஸ்டார் சீனிவாசன், தன் கொடும்பாவி எரிக்கப்பட்டதை கேள்விப்பட்டு, "ஆஹா அற்புதம்... எட்றா ஒரு டிக்கெட்டு ஆந்திராவுக்கு. அங்கேயும் கலக்கணும்" என்று சொல்லி வருகிறாராம். ‘லத்திகா' படத்தை தெலுங்கில் டப் செய்து, ஆந்திராவில் ரிலீஸ் செய்யும்போது இரண்டு பவர்ஸ்டாரின் ரசிகர்களும் மோதிக்கொண்டாலும் ஆச்சரியமில்லை. சரி விடுங்க, எந்த மண்டை முதலில் உடையுதன்னு பார்ப்போம்...!

புதன், 13 பிப்ரவரி, 2013

பவர் ஸ்டார், ‘பவர்’ காட்டிவிட்டு சென்றிருக்கிறார்.

  “லட்டு தந்த தம்பி சந்தானம்; லட்டு போல கிடைத்த தம்பி விஜய்” -அண்ணன் பவர் ஸ்டார்!

 நேற்று மாலை சென்னை அண்ணாசாலையிலுள்ள தேவி தியேட்டரில் நடைபெற்ற பட ஆடியோ விழாவுக்கு சென்றிருந்த சினிமாக்காரர்கள் யாருமே, அடுத்து ஒரு பங்ஷன் வைத்தால், வருந்தி அழைக்கப் போகும் நபர், சாட்சாத் பவர் ஸ்டார்தான்! அந்தளவுக்கு பவர் ஸ்டார், ‘பவர்’ காட்டிவிட்டு சென்றிருக்கிறார்.

நடைபெற்றது, ‘ஒன்பதுல குரு’ படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன். நடிகர் விஜய்யிடம் கிட்டத்தட்ட 20 வருடங்களாக பி.ஆர்.ஓ.வாக பணிபுரிந்து வரும் பி.டி.செல்வக்குமார் முதல் முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்திருக்கும் படம் இது. அந்த வகையில் இளைய தளபதி விஜயம், மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் வந்திருந்தனர்.
பி.டி.செல்வக்குமார் இன்டஸ்ட்ரியில் நன்கு அறியப்பட்டவர் என்ற விதத்தில், கே.எஸ்.ரவிகுமார் (இவரும் இந்த படத்தில் நடிக்கிறார்) கே.பி.ஆனந்த், சமுத்திரக்கனி, லக்ஷ்மிராய், ஓவியா, கலைப்புலி தாணு, அபிராமி ராமநாதன், ஆர்.பி.சௌத்ரி, என்று ஏகப்பட்ட தலைகள். இவர்கள் எல்லோருடன், ஸ்பெஷல் அட்ராக்ஷனாக, பவர் ஸ்டார்!
பவர் ஸ்டாரின் பவர் அறிந்து, விஜய் பக்கத்திலேயே அமர வைத்திருந்தார்கள் அவரை.மேடையில் ஏகப்பட்ட வி.ஐ.பி.கள் இருந்தாலும், விழா முடியும்வரை ஓயாத கைதட்டல் இருவருக்குதான். ஒருவர், விஜய். மற்றையவர் பவர் ஸ்டார்!முன்பெல்லாம் ஏதாவது விழாவுக்கு பவர் ஸ்டார் சென்றால், ‘ரசிகர்களை’ கூடவே அழைத்துச் செல்வது வழக்கம். அவர்கள் தட்டுவார்கள், கைகளை! இப்போதெல்லாம், நிஜமாகவே ஆட்கள் கை தட்டுகிறார்கள்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் ரம்யா, “அடுத்து ‘பவர் ஸ்டார்’ பேசுவார்” என்று சொன்னவுடன் அதிர வைத்த கைதட்டலும், விசில் சத்தமும், மேடையில் இருந்தவர்களையே கைதட்ட வைத்தது.
சிரித்த முகத்தோடு பேசினார் பவர் ஸ்டார். “இந்த ‘ஒன்பதுல குரு’ படத்தில் நான் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கேன். இந்த விழாவுக்கு இளையதளபதி விஜய் வந்திருக்கிறார். எனக்கு ரொம்ப சந்தோஷமாக உள்ளது. எல்லோருக்கும் அவர் இளையதளபதி ஆனால் எனக்கு மட்டும் இளைய தம்பி.
லட்டு படத்தின் மூலம் எனக்கு சந்தானம் என்ற அருமைத் தம்பி கிடைத்தது போல, இப்போது தம்பி விஜய்யும் எனக்கு அருமைத் தம்பியாக கிடைத்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இதே தியேட்டரில்தான் ஒரு பிரம்மாண்டமான ஆடியோ பங்ஷன் நடந்தது. அந்தப் படம் இப்போது சூப்பர் ஹிட் படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ‘லட்டு’ விழாவுக்கு அடுத்தபடியாக, இதே தியேட்டரில், இப்போது இந்த படத்தின் ஆடியோ விழா நடக்கிறது. அந்தப்படம் போலவே இந்தப்படமும் கண்டிப்பாக வெற்றி பெரும்.
இந்தப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் நீங்கள் டான்ஸ் ஆட வேண்டும் என்று டைரக்டர் பி.டி.செல்வக்குமாரும், பி.ஆர்.ஓ நிகில்குமாரும் என்னை வந்து கேட்டர்கள். நான் டான்ஸ் ஆடலாமா வேண்டாமா என்று யோசித்தேன்.
அப்போதுதான் அந்த பி.ஆர்.ஓ. “இவர் யார் தெரியுமா? இவர்தான் விஜய்யோட பி.ஆர்.ஓ.” என்று சொன்னார். விஜய் என்று சொன்னதும் நான் எந்த கேள்வியும் கேட்காமல் உடனே ஒப்புக்கொண்டேன்” என்றார் பவர் ஸ்டார் டபுள் கைதட்டலுடன். முதல் கைதட்டல், விஜய் பெயரை சொன்னதற்கு… அடுத்தது, பவர் பேசி முடித்ததற்கு!

திங்கள், 10 டிசம்பர், 2012

நான் பவர் ஸ்டார் ரசிகன் ; இயக்குநர் ஷங்கர்


நடிகர் சந்தானம் முதன்முறையாக ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படத்தை இயக்குனர் ராமநாராயணனுடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.
இப்படத்தில் சந்தானத்துடன் பவர் ஸ்டார் சீனிவாசனும், புதுமுகம் சேதுவும் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று தேவி திரையரங்கில் நடைபெற்றது.
சாதாரண நிகழ்ச்சியாக ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி பவர் ஸ்டார் மற்றும் அவரது ரசிகர்களின் கைதட்டல், விசில் சத்தத்தால் களைகட்டியது. பவர் ஸ்டாரின் பேரை யார் உச்சரித்தாலும் திரையரங்கில் ஒரே விசில் சத்தமும், கைதட்டலுமாக இருந்தது. அந்தளவுக்கு கூட்டம் அலைமோதியது.
இவ்விழாவில் பவர் ஸ்டார் பேசும்போது, ’’அனைவருக்கும் இந்த லட்டு ஒரு திகட்டாத லட்டாக இருக்கும் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு எல்லோரும் சந்தோஷமாக நடித்திருக்கிறோம்.
திரையுலகில் நான் மீண்டும் முத்திரை குத்த வாய்ப்பளித்த அருமை தம்பி சந்தானத்துக்கு ரொம்ப நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். நான்தான் நடிக்க வேண்டும் என்று தம்பி அன்புக் கட்டளையின் பேரில் நான் இந்த படத்தில் நடித்திருக்கிறேன். தயாரிப்பாளர் ராமநாரயாணன் என்னை அழைத்து என்னிடம் ஒப்பந்தம் போட அவ்வளவு தயக்கம் காட்டினார். ஒரு அரைமணி பேச்சுவார்த்தைக்கு பின் நீங்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். அப்படி நடிக்க வாய்ப்பளித்த அவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதன்பிறகு என் அன்பு, ஆசை, அருமைத் தம்பி சங்கர் சாரை நான் ரொம்ப பாராட்ட வேண்டும். அவருடைய ‘ஐ’ படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார். நான் சற்று யோசித்தேன், இது கனவா? நனவா? என்று. அழைப்பு வந்ததின் பேரில் நான் அங்கு சென்றபோது எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.
நான் அவரிடம் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். ஆனால் என் தம்பி ஷங்கர் அவர்கள், “அண்ணே நான் உங்களுடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும். நான் உங்களுடைய ரசிகன்“ என்று சொன்னவுடன், உண்மையிலேயே நான் பிறந்த பலனை அடைந்துவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.
அதேபோல், இன்னொரு தம்பி சிம்பு அவர்கள் என்னுடன் இப்படத்தில் நடிக்கிறார். எனக்கு இந்த படத்தின் மூலம் நிறைய தம்பிமார்கள் கிடைத்துள்ளார்கள். அதற்குமேல் எனக்கு உயிரினும் மேலான ரசிகர்களும் கிடைத்திருக்கிறார்கள்’’என்று கூறினார்.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

பவர் ஸ்ராரின் ஜெயில் அனுபவங்கள்...அடுத்து முதல்வர் பதவி?(power star )

'பவர் ஸ்டாரை சினிமாவில பார்த்திருப்பீங்க, ஃபங்ஷன்ல பார்த்திருப்பீங்க, 'நீயா நானா’வில கோபிநாத் கொஸ்டீன் கொக்கிபோட்டுப் பார்த்திருப்பீங்க, பவர் ஸ்டாரை ஜெயிலிலே பார்த்திருப் பீங்களா?’ என்று நாமாகவே ஒரு பஞ்சர் பஞ்ச் சொல்லும் படி ஜெயிலுக்குப் போய் வந்திருக்கிறார் பவர் ஸ்டார். எடுத்த எடுப்பிலேயே,
ஜெயிலுக்குப் போய் வந்தவர் கள் எல்லாம் என்ன சொல்வார் களோ, அதே வார்த்தைகளோடு ஆரம்பித்தார் சீனிவாசன்.
''கோர்ட்ல கேஸ் நடந்து கிட்டிருக்கு. அதனால அதைப் பத்தி ரொம்பப் பேச முடியாது. ஆனா, ஒரு விஷயம்... யாரோ என் வளர்ச்சி பொறுக்காம சதி பண்றாங்க. அது சினிமாக்காரங்களா, கூட இருக்குறவங் களானு தெரியலை... எந்த சதியா இருந்தாலும் சட்டத்துக்கு முன்னாடி நான் ஒரு அப்பாவினு நிரூபிப்பேன்!''
'ஆமா, ஜெயில் அனுபவம் எப்படி இருந்தது?''
'2,000 பேர் உள்ள இருந்தாங்க. என்னைப் பார்த்ததும் 'பவர் ஸ்டார், பவர் ஸ்டார்’னு உற்சாகம் ஆயிட் டாங்க. நானும் உற்சாகம் ஆயிட்டேன். ஆனா ஒண்ணுங்க, என்னோட படத் துக்கு ஜெயில் சீன் எப்படி வைக்கணும்கிறதைக் கத்துக்கிட்டேன்!''
''ஜெயிலுக்கு எல்லாம் போய்ட்டு வந்துட்டீங்க, அப்போ அடுத்து அரசியல்தானே?''
'எனக்கு அந்த மாதிரி ஆசை எல்லாம் இல்லை. இறைவனுடைய அமைப்பு நான் முதல்வர் ஆகணும்னு இருந்ததுனா, ஆக வேண்டியதுதான். ஆனா, எனக்கு சூப்பர் ஸ்டார் மாதிரி ஆகணும்னுதான் ஆசை!''
' 'கண்ணா லட்டு திங்க ஆசையா’ படத்துல நடிக்கிறீங்களா, இல்லை, தூக்கிட்டாங்களா?''
''அட, நீங்க வேற. 'அது வேற இது வேற’னு சொல்லிட்டாங்க. சந்தானம் கூப்பிட்டுப் பேசினாரு. 'ஒண்ணும் பிரச்னை இல்லைண்ணா.  அடுத்த மாசம் வாங்கண்ணா’னு சொன்னாரு. அந்தப் படத்துல மூணு ஹீரோவில நான் ஒரு ஹீரோ!''
''அப்போ ஷங்கரோட 'ஐ’ படத்திலயாவது உங்களைத் தூக்கிட் டாங்களா, இல்லையா?''
''நீங்க ஏங்க அதிலேயே குறியா இருக்கீங்க? 'ஐ’ படத்துக்கு நான் ஷூட்டிங் முடிச்சே கொடுத்துட்டேன். ஷங்கர் நல்லா எனக்கு கோ ஆபரேட் பண்ணினாரு. 'நானும் உங்க ஃபேன்தான்’னு சொல்லி என்னோட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டார் ஷங்கர்!''
'சினிமாவில உங்களுக்குப் போட்டி யாரு?'
''வேற யாரு, சூப்பர் ஸ்டார்தான்!''
''அவரை நேர்ல பார்த்திருக்கீங் களா?''
''பார்த்திருக்கேன். ஆனா, பேசுற வாய்ப்பு கிடைக்கலை. ஆனா, கமலை மட்டும் பார்த்துப் பேசி போட்டோ எடுத்துகிட்டேன்.  ஒரு ஃபங்ஷன்ல என் ரசிகர் எல்லாம் அவர் முன்னாடி ஆரவாரம் பண்ணினப்ப அவருக்கு ஒரே சந்தோஷம்!''
''பவர் ஸ்டாருக்கு ஏத்த ஜோடி யாரு?''
''ஐஸ்வர்யா ராய்தான்!''
''ஏங்க, அவங்களுக்குக் குழந்தை எல்லாம் பிறந்துடுச்சுங்க...''
'அதனால என்னங்க? சினிமாவிலதாங்க ஜோடி சேரப் போறேன். ஒரு தடவையாவது அவங்களோட நடிச்சிடணும். ஆனா ஒண்ணு அவங்க, கதைக்குத் தகுந்த கதாநாயகியாக இருக்கணும். இல்லைனா ஐஸ்வர்யா ராய்னாலும் நோதான்!'.
''பவர் ஸ்டார்ங்கிற முறையில பவர் கட்டைப் பத்தி என்ன நினைக் கிறீங்க?''
'நாம மின்சாரத் தேவை அளவுக்கு இன்னும் மின்சாரம் உற்பத்தி ஆகலைனுதான் நினைக்கறேன். ஆனா, அம்மா பிரமாதமா ஆட்சி பண்ணிட்டு இருக்காங்க. அதனால எல்லாத்துக்கும் சீக்கிரம் கரன்ட் கொடுத்துடுவாங்கனு நம்பறேன்!''
''உங்க தொல்லை ஃபேஸ்புக், ட்விட்டர்லயும் தாங்கலையே...?''
'இதுல ஆச்சர்யம் என்னன்னா நான் எதுலயுமே இல்ல. என் ஃப்ரெண்ட்ஸ் சொல்லித்தான் எனக்கே தெரியும். காலேஜ் பசங்க நிறைய பேர் என்னோட ஃபேன்ஸ். அவங்க என்மேல வெச்சிருக்கிற பாசத்துல அவங்களாவே அக்கவுன்ட் ஆரம்பிச்சிட்டாங்க!''
'ஓப்பனா சொல்லுங்க, நீங்க வில்லனா... இல்லே காமெடி பீஸா?'
''ஒரே வார்த்தையில சொல் லணும்னா....நான் ரொம்ம்ம்ம்ப நல்ல்ல்ல்லவன் சார்!''