எச்சரிக்கை

" கொல கொலயா முந்திரிக்கா பவர் ஸ்டார் ர தொட்டா நீ கத்திரிக்கா "

வெள்ளி, 8 மார்ச், 2013

“கூகுள், யஹூ ஓனர்கள் பவர் ஸ்டார் சீனிவாசன் ரசிகர்களா?”







தமிழ் சினிமா இணையதளங்களிலும், சமூக இணையதளங்களிலும் அதிகம் அடிபடும் பெயர் பவர் ஸ்டார் சீனிவாசனின் பெயர் என்ற நிலை மாறி, அகில இந்திய அளவிலும் செல்வாக்கு ஏற்பட்டிருக்கிறது நம்மாளுக்கு.
அதனால், கொந்தளிக்கிறார்கள் ஆந்திரா ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில், சூப்புர் ஸ்டார் என்றால் ஒரேயொரு ரஜினி, இளைய தளபதி என்றால் ஒரேயொரு விஜய் என்று அவரவர் பட்டப் பெயர்களில் அறியப்பட்டு இருப்பதுபோல, ஆந்திராவில் பவன் கல்யானோட பட்டப் பெயர் பவர் ஸ்டார்! அவரது பட போஸ்டர்கள் எல்லாவற்றிலும், பவர் ஸ்டார் பவன் கல்யான் என்றே போடப்படுகிறது.
இப்போதெல்லாம் கூகுள், யாஹு போன்ற சர்ச் இஞ்சின் இணைய தளங்களுக்கு போய் ‘பவர் ஸ்டார்’ என்று தெலுங்கு சினிமா ரசிகர்கள் டைப் செய்தால், எடுப்பான பற்களுடன் சிரித்தபடி ஒரு மூஞ்சிதான் வந்து நிற்குதாம்!
“யாருங்க இது பல்லை காட்டிட்டு நிற்கிறது?  கல்யாணராமன் கமல் போல நம்ம பவன் கல்யானின் புது படத்துக்கு, புது கெட்டப்போ” என்று தெலுங்கு ரசிகர்கள் தலையைப் பிய்த்துக்கொண்டு மேலதிக விபரங்களை தேடியதில், தமிழில் ஒரு பவர் ஸ்டார் உலா வரும் விஷயம் அவர்களுக்கு தெரிந்தது.
அதுவும் சாதாரண உலா அல்ல… இணைய உலா! அதில்தான் தொடங்கியது ஆந்திராக்காரர்களுக்கு சிக்கல்.
பவன் கல்யான் ரசிகர்கள் அதுபற்றி புகார் கொடுத்ததை அடுத்து, அவரது ரசிகர்மன்ற தலைமையகத்தில் கூடி, ஒரு டெஸ்ட் செய்து பார்த்தார்களாம்.
சர்ச் இஞ்சின் இணைய தளங்களுக்கு போய் ‘பவர் ஸ்டார்’ என்று டைப் செய்தால், முதல் 4 பக்கங்களுக்கு நம்ம பவர் ஸ்டாரின் விதவித போஸ்கள் வந்து 5-வது பக்கத்துக்கு பிறகுதான், போனால் போகிறதென்று பவன் கல்யான் பற்றி வருகிறதாம்!
இதனால், கடந்த சில தினங்களுக்கு முன் நம்ம ‘பவர் சீனியோட’ கொடும்பாவியை எரிச்சு எதிர்ப்பு தெரிவிச்சுருக்காங்க பவன் கல்யானோட ரசிகர்கள்.
அது மட்டுமல்ல, “நம்ம ரியல் ஹரோவும், அவங்க (ஹி..ஹி.. தமிழர்கள்) காமெடியனும் ஒண்ணா? இனிமேல் அப்படி வராதது மாதிரி உங்க சர்ச் இன்ஜினை மாற்றி அமைச்சுக் கொடுங்க” என்று இவ்விரு இணைய தளங்களுக்கும் வேண்டுகோள் விடுத்து லட்சக்கணக்கான ரசிகர்கள் இமெயில் அனுப்பியிருக்கிறார்களாம்.
ஆனால், இணையதளத்தில் அதிக எண்ணிக்கையானவர்கள் எந்த பவர் ஸ்டாரை கிளிக் செய்கிறார்களோ, அந்த பவர் ஸ்டாரின் பெயர் முதலில் வருவதாக புரோகிராம் செய்யப்பட்டுள்ளன, கூகுள், மற்றும் யாஹூ சர்ச் இஞ்சின்கள். அந்த விதத்தில் அதிகம் கிளிக் செய்யப்படுவது, நம்ம சீனியோட போட்டோக்கள்தான்!
தன் கொடும்பாவி எரிக்கப்பட்டதை கேள்விப்பட்ட நம்ம ஊரு பவர், “ஆஹா அற்புதம்… எட்றா ஒரு டிக்கெட்டு ஆந்திராவுக்கு. அங்கேயும் கலக்கணும்” என்று சொல்லி வருகிறாராம்.
இரு மாநிலங்களுக்கும் இடையே நிலைமை இன்னமும் கன்ட்ரோலில்தான் இருக்கிறது. எப்போது அவுட்-ஆஃப்-கன்ட்ரோல் ஆகும் என்றால், ‘லத்திகா’ படத்தை தெலுங்கில் டப் செய்து, ஆந்திராவில் ரிலீஸ் செய்யும்போதுதான்!
அப்போது ஓடும் ரத்த ஆறு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக